முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/திருக்குறள்

விக்கிமூலம் இலிருந்து
திருக்குறள்


இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

வாழ்க்கைத் துணை நலம்

மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு.

மக்கள் பேறு

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கள் பேறல்ல பிற.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.