வரலாற்றுக் காப்பியம்/நாவலன் தீவு

விக்கிமூலம் இலிருந்து

நாவலன் தீவு

பறவையினத்து ஒலி வகையைப் பழகி
மிருக இனத்து குரலை இனங்கொண்டு
மனுக் குலத்தின் ஓசையுடன் உறவுபடுத்தி
பேசிப் பேசி ஒலிக்கு வடிவம் கொடுத்தான்
இருபத்து நான்கு சாயலில் எழுத்தாயிற்று
எழுத்தை உயிரென்று மெய்யென்று வகுத்தான்
அடிப்படை உயிர் ஐந்தே ஆ ஈ ஊ ஏ ஓ
மெய்வகை பதினெட்டு ஆயுதம் ஒன்றே
ஆக இருபத்து நான்கு ஒலிகளே
தமிழக்கு இயல்பான அமைப்பு
உயிரை ஓசை குறைத்து ஒலித்தான்
குறில் ஐந்தாயிற்று இருகுறிலை இணைத்தான்
அஇ-ஐ என்றும் அஉ-ஔ என்றும்
ஆக பன்னிரண்டு உயிராகப் பண்படுத்தினான்
வலித்தும் மெலித்தும் இடைப்பட ஒலித்தும்
மெய்யை இனம்பிரித்து நயப்படுத்தினான்
ஓசை சுவைபட ஒலியைச் சுரப்படுத்தினான்
நாவளம் கொழித்தது நாவலன் ஆனான்
நாடும் நாவலன் தீவெனப்பேர் கொண்டது
மொழிந்து மொழிந்து மொழியானது
இசைத்து இசைத்து இசையானது
எழுத்தும் சொல்லும் பொருள் குறித்ததென்ற
மொழிமுதல் காரணம் தெரியாத அயலார்
நாவல்மரம் மிகுந்ததால் நாவலம் தீவென்றார்
நாலு காலுடையதை நாற்காலிஎன்றாங்கு