விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஏப்ரல் 2017/05

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"சேக்கிழார்", மா. இராசமாணிக்கனார் எழுதிய வாழ்க்கை வரலாறு.

தமிழ்ப் புலவர் வரலாறுகள் நல்ல ஆராயச்சி முறையைத் தழுவி வெளிவருதல் அருமையாக இருக்கிறது. ஆராய்ச்சிக் காலமாகிய இக்காலத்தில் வெளிவரும் நூல்கள் கல்வெட்டு-சரித்திரம்-இலக்கியம் இவற்றை அடிப் படையாகக் கொண்டு வெளிவருதலே நல்லது. இந்த முறையில் அமைந்திருப்பதே இச்சிறு நூல்.

சேக்கிழார் ஒரு வேளாளர்; தமிழ்ப் புல்வர்; அரசியல் அறிஞர்; கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் பேரரசானாக இருந்த இரண்டாம் குலோத்துங்கனின் முதல் அமைச்சர் ஆவர். அப் பெரியார் நாயன்மார் வரலாறுகளைப் பெருங் காவியமாகப் பாடின. பெரும் புலவர். அக் காவியமே பெரிய புராணம் என்பது.

சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தமையால் ஸ்தல யாத்திரை செய்தார்; நாயன்மார் வரலாறுகள் பற்றிய மூலங்களைச் சேகரித்தார்; கல்வெட்டுகளை ஆராய்ந்தார்; கர்ண பரம்பரைச் செய்திகளை ஆராய்ந் தார்; இலக்கிய நூல்களைப் படித்தார்; இவை அனைத்தின் துணையைக் கொண்டும் அரிய காவியம்பாடினார்.

சேக்கிழார்
1. தொண்டை நாடு

தமிழகம்

தொண்டை நாடு என்பது தமிழகத்தின் ஒரு பகுதி. அதன் பிற பகுதிகள் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, கொங்கு நாடு என்பன. இந்த எல்லா நாடுகளும் வடக்கே வேங்கட மலைக்கும் தெற்கே குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியில் இருப்பவை.

சேர நாடு

சேர நாடு என்பது மலையாள மாவட்டங்கள், கொச்சி சமஸ்தானம், திருவாங்கூர் சமஸ்தானம் என்னும் மூன்றும் சேர்ந்த நிலப் பகுதி ஆகும். இது மலை வளம் மிகுதியாக உடையது. இதன் பழைய தலை நகரம் வஞ்சி என்பது. முசிறி, தொண்டி என்பன இதன் துறைமுகப் பட்டினங்கள். இந்த நாடு பல நூற்றாண்டுகளாக அகில், சந்தனம், தேக்கு முதலிய மர வகைகளையும், யானைத் தந்தம், மிளகு முதலிய பொருள்களையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இச் சேர நாட்டைச் சேரர் என்பவர் ஆண்டு வந்தனர்.


(மேலும் படிக்க...)