விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 8,2012

விக்கிமூலம் இலிருந்து
நற்றிணை
2. இடியினும் கொடியதாகும்?
பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாலை
துறை: உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது


அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
ஓலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு,
ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந்தலைக் குறுளை, மாலை,
மானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே;
வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!