விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/பிப்ரவரி 2017/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"கபாடபுரம்", நா. பார்த்தசாரதி எழுதிய வரலாற்று புதினம்.

"கபாடபுரம்" என்ற சொல் எந்தத் தமிழ் மகனையும் தலைநிமிர்ந்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தது. தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கியச் செல்வமும் செழித்து வளர்ந்த பெருநிலப் பரப்பின்தலைநகரம் கபாடபுரம். வரலாற்றுச்செய்திகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்ற கபாடபுரக் காலத்துச் சூழ்நிலையை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான நாவலைப் படைத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள்.

பழந்தீவுகளையெல்லாம் வென்று தெற்குமா கடல் முழுதும் தன் ஆட்சியை செலுத்தும் பாண்டியப் பேரரசை நிறுவ விரும்பும் பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியரின் அரசியல் ஆசையும் சிகண்டியாசிரியரால் பண்படுத்தப் பெற்ற இசையுள்ளமும் மென்மையும் படைத்த சாரகுமாரனின் இனிய கனவுகளும் ஒன்றோடொன்று மோதும்போது நம் உள்ளம் தடுமாறாமல் இருக்க முடியாது.

முதுமையால் உடல் தளர்ச்சியுற்றபோதும் உள்ளம் உருக்கினும் கடினமாய் அமைந்த வெண்தேர்ச்செழியர், இலக்கிய அறிவாலும் இசைப் பயிற்சியாலும் தன் பேரன் மென்மையுள்ளம் பெற்றிருப்பதைக் கண்டு மனங் கலங்கும் நிலை நம் உள்ளத்தைக் கவர்கிறது.

கதை முகம்

இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ‘கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ‘முகஞ் செய்தல்’ - என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஒவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும்முன் சுருக்கமாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுவது அவசிய மென்று கருதுவதால் தான் இதை இப்போது எழுதுகிறேன்.

இனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி-வளர்ந்த, வாழ்ந்த ஒரு பொற் காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்தகாலத்தின் பெருமைக்குரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற


(மேலும் படிக்க...)