வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/வரலாறு படைத்த வ.உ.சி. வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து
வரலாறு படைத்த வ.உ.சி. வாழ்க்கை
1872 செப்டம்பர் 5—நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறப்பு.
1894 பிப்ரவரி—வழக்கறிஞர் பயிற்சியில் தேர்ச்சி.
1895 வ.உ.சி. — வள்ளியம்மை திருமணம்.
1900 தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணி தொடங்குதல்
1901 வ.உ.சி. — மீனாட்சியம்மை திருமணம்.
1905 மே— பொ. பாண்டித்துரைச் சாமித் தேவர் அவர்களைத் தலைவராகக் கொண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பரிசோதக உறுப்பினராகப் பொறுப்பு.
1906 அக்டோபர் 16-சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882ஆம் ஆண்டுக் கம்பெனிகள் சட்டப்படி எண் 85 கிரேட் காட்டன் சாலை, துரத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் 13 of 1906.
டிசம்பர்—சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கு இரண்டு கப்பல்கள் வாங்க வ.உ.சி. பம்பாய் சென்றார். அவர் அங்கு இருக்கும்போது மூத்த மகனும் மனைவியும் உடல்நலம் குன்றியதையும் பொருட்படுத்தாமல் பம்பாயில் தங்கி, திலகரின் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார்.
1907 பாரதியாருடன் சூரத் காங்கிரசில் பங்கு பெற்றார்.
1908 நெல்லை தேசாபிமான சங்கம் உருவாகிறது. ஆறுமுகத்தம்பிரானைக் கொலை வழக்கில் விடுவித்துச் செல்வாக்குப் பெற்றார்.
பிப்ரவரி 3 முதல் மார்ச்சு 9 வரை துர்த்துக்குடிக் கடற்கரையில் சுப்பிரமணிய சிவாவுடன் தொடர் சொற்பொழிவுகள்.

1908 பிப்ரவரி 27— தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்.
மார்ச்சு 9-பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாடினார்.
மார்ச்சு 9—நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சிவாவுடன் கலெக்டர் விஞ்சு என்பவரைச் சந்தித்தார்.விஞ்சுக்கும் வ.உ.சி.க்கும் நடந்த உரையாடலைப் பாரதியார் இரண்டு பாடல்களாகப் பாடியுள்ளார்.
மார்ச்சு 12 - வ. உ. சி.யும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.
மார்ச்சு 13—வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து, திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் கடையடைப்பு, எதிர்ப்பு ஊர்வலங்கள், எழுச்சி.
மார்ச்சு 26—கூடுதல் மாவட்ட நீதிபதி வாலஸ் வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.
ஜூலை 7—மாவட்ட நீதிபதி பின்கே , வ. உ. சி. க்கு ஆயுள்தண்டனை வழங்கினார். நவம்பர் 4-உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை, ஆறு ஆண்டுகள் நாடு கடத்தலாகக் குறைக்கப்பட்டது. பிறகு, இதுவே ஆறு ஆண்டுகள் கடுஞ்சிறையாக மாற்றப்பட்டது.
1911 ஜூன் 17-மணியாட்சியில் மாவட்ட மாஜிஸ்டிரேட் (கலெக்டர் ஆஷ் , வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1912 டிசம்பர் 12 —கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி. விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் நெல்லை மாவட்டத்தில் நுழையத் தடை நீடித்தது.
1915 மார்ச்சு — லோகமாண்ய பால கங்காதர திலகரின் அழைப்பை ஏற்று, பூனா வந்து சேர்ந்தார்.
மார்ச்சு 8—திலகருடன் முதல் உலகப்போர் பற்றியும் ஜெர்மனி உதவியுடன் இந்தியாவில் புரட்சி நடத்துவது பற்றியும் விவாதித்தார்.

.

1919 மார்ச்சு — ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த சத்தியாகிரகத்தையொட்டி காந்திக்கு ஆதரவு தந்தார்; காந்தியைச் சென்னையில் வரவேற்றுப் பேசினார்.
டிசம்பர் — சென்னை வந்திருந்த திலகருடன் சந்திப்பு. திலகர் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்திருந்தது குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். அதனால் அந்த இயக்கத்தில் சேராதிருந்தார்.
1920 கல்கத்தா காங்கிரசில் கலந்து கொண்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்துக் காங்கிரசிலிருந்து விலகினார். கோவை வாசம்.
1924 வழக்கறிஞர் பணி செய்ய இருந்த தடை நீங்கி, சன்னது பெற்றுக் கோவில்பட்டியில் குடியேறினார். நெல்லை மாவட்டத்தில் நுழையக்கூடாது என்ற தடையும் நீங்கியது.
ஒத்துழையாமை இயக்கத்தைத் திருப்பிப் பெற்றவுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார், சேலம் மாவட்ட அரசியல் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினார். ஆயினும் அரசியலில் தீவிர ஈடுபாடு கொள்ளவில்லை.
1933 காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதும் அவரது அரிசனச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காந்தி தமிழகம் வந்தபோது காரைக்குடியில் அவரை வரவேற்க நடந்த ஏற்பாட்டுக் கூட்டத்துக்கு வ.உ.சி. தலைமை தாங்கினார்.
1934 திருச்செந்தூரில் வ.உ.சி.யின் திருக்குறள் உரை வெளியிடப்பட்டது.
1935 அப்போது காங்கிரசின் தலைவராக இருந்த பாபு ராஜேந்திரப் பிரசாத் தென்னிந்தியச் சுற்றுப் பயணத்தின்போது தூத்துக்குடி சென்று வ.உ.சி.யைச் சந்தித்து மரியாதை செய்தார்.
1936 நவம்பர் 18—மறைவு.