பெருங்கதை/4 11 பிரச்சோதனருக்குப் பண்ணிகாரம் விட்டது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

4 11 பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது

உதயணன் பிரச்சோதனனுக்கு ஓலை அனுப்புதல்[தொகு]

விளங்கிழை பயந்த வேந்துபுறங் காக்கும்
வளங்கெழு திருநகர் வல்லே செல்கென
நாடுதலை மணந்து நாமுன் னாண்ட
காடுகெழு குறும்புங் கனமலை வட்டமும்
எல்லை யிறந்து வல்லை நீங்கி 5
அழிந்த காலை யாணை யோட்டி
நெருங்கிக் கொண்ட நீர்கெழு நிலனும்
இவையினி யெங்கோ லோட்டி னல்லதை
தமர்புகத் தரியா வென்றுதா னெழுதிய
வழிபாட் டோலையொடு வயவரை விடுத்துக் 10

யூகிக்குக் கூறியன[தொகு]

கரும மெல்லா மவனொடு நம்மிடை
ஒருமையி னொழியா துரைக்கென வுணர்த்தி
ஏற்றோர்ச் சாய்த்தவிக் குருகுலத் தகத்தோர்
ஆற்றலி லாளன் றோற்றினு மவந்தியர்
ஏழ்ச்சி யான்றிக் கீழ்ப்பட் டொழுகினும் 15
இகத்த லில்லை யிருதிறத் தார்க்கெனப்
பயத்தொடு புணர்ந்த பழிப்பில் செய்கையின்
நளிபுன னாட்டொடு நகர மறியத்
தெளிவிடை யிட்ட திண்ணிதிற் செய்கெனப்
பல்பொருட் கருமஞ் சொல்லிய பின்னர் 20

பிரச்சோதனனுக்கு அனுப்பிய பொருள்கள்[தொகு]

அருமலை யடுக்கத் தயிரா பதமெனும்
பெருமலைப் பிறந்து பெறுதற் கரிய
தீதுதீர் சிறப்பிற் சிங்கச் சுவணமென்
றோசை போகிய வொண்பொற் கலங்களும்
கலக்கமில் சிறப்பிற் காம்போ சத்தொடு 25
நலக்காந் தாரமென் னாட்டுப் பிறந்த
இலக்கணக் குதிரை யிராயிரத் திரட்டுயும்
ஆருணி வேந்தை வென்றுகைப் படுத்தின
தாரணி புரவி தகைபெறப் பூண்டன
இருநூற் றைம்பதிற் றிரட்டி தேரும் 30
ஒருநூ றாகிய வுயர்நிலை வேழமும்
கோல மான கோபத்திற் பிறந்தன
பாலவா வேறொடு பதினா றாயிரம்
காவல் வேந்தற்குக் காட்டுபு கொடுக்கெனப்

வாசவதத்தையின் தாய்க்கு அனுப்பிய மகளிர்[தொகு]

பாய்புனற் படப்பைப் பாஞ்சா லரசன் 35
உரிமைப் பள்ளியுட் டெரிவனன் கொண்ட
ஏற்ற கோலத் திளமையொடு புணர்ந்தோர்
நூற்றொரு பதின்மர் கோற்றோடி மகளிருட்
….ட் பணைமுலை மகளிரைப்
பாசிழை யாயத்து வாசவ தத்தையைப் 40
பயந்தினி தெடுத்த வயங்கிழைப் பணைத்தோட்
கோப்பெருந் தேவிக்குக் கொடுக்கனப் பணித்தே

கோபாலகன் தாய்க்கு விடுத்த மகளிர்[தொகு]

ஓரிரு பதின்மரை யாரமர்க் கடந்து
கோல்கொள வென்ற கோபா லகனைச்
சால்புளிப் பயந்த சாயாக் கற்பின் 45
நீல வேற்க ணிரை தொடிக் கீகெனப்

கோபாலகற்கும் பாலகுமரற்கும் அனுப்பிய மகளிர்[தொகு]

பொற்கோங் கேய்ப்ப நற்கல னணிந்த
முப்பதி னிரட்டி முற்றிழை மகளிரைப்
பால குமரற்குங் கோபா லகற்கும்
பால்வே றிவர்களைக் கொடுக்கெனப் பணித்து 50

பரதகற்கு அளித்த பொருள்கள்[தொகு]

முற்பாற் கூறிய வெற்பினுட் பிறந்த
எட்டுநூ றாயிர மெரிபுரை சுவணம்
பட்டாங் கிவற்றைப் பரதகற் கீகென

மற்றத் தம்பியர்க்கு அளித்தன[தொகு]

மற்றவன் றம்பியர்க் கத்துணைப் போக்கிப்

சிவேதனுக்கு அளித்த பொருள்கள்[தொகு]

பதினா றாயிரஞ் சிவேதற் கீத்துப் 55
பிறவு மின்னவை பெறுவோர்க் கருளி

யூகியின் புறப்பாடு[தொகு]

வனப்பொடு புணர்ந்த வையாக் கிரமெனும்
சிலைப்பொலி நெடுந்தேர் செவ்விதி னல்கி
வீயா வென்றி விண்ணுத் தராயனோ
டீகியுஞ் செல்கென வோம்படுத் துரைத்து 60

யூகி முதலியோரை விடுத்தல்[தொகு]

வினைமேம் படீஉ மேற்றசை நாளுள்
நிகழ்ந்த நன்னா ளறிந்தனர் கொடுப்ப
அப்பா லவர்களைப் போக்கி யிப்பால்

வாசவதத்தையின் வருணனை[தொகு]

யாற்றற லன்ன கூந்தல் யாற்றுச்
சுழியெனக் கிடந்த குழிநவில் கொப்பூழ் 65
வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்
அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்
பிறையெனச் சுடருஞ் சிறுநுதல் பிறையின்
நிறையெனத் தோன்றுங் கறையில் வாண்முகம்
அரவென நுடங்கு மருங்கு லரவின் 70
பையெனக் கிடந்த வைதேந் தல்குல்
கிளியென மிழற்றுங் கிளவி கிளியின்
ஒளிபெறு வாயி னன்ன வொள்ளுகிர்
வாழையந் தாளுறழ் குறங்கின் வாழைக்
கூம்புமுகி ழன்ன வீங்கிள வனமுலை 75
வேயெனத் திரண்ட மென்றோள் வேயின்
விளங்குமுத் தன்ன துளங்கொளி முறுவற்
காந்தண்முகி ழன்ன மெல்விரல் காந்தட்
பூந்துடுப் பன்ன புனைவளை முன்கை
அன்னத் தன்ன மென்னடை யன்னத்துப் 80
புணர்வி னன்ன தண்டாக் காதல்
அணிக்கவின் கொண்ட வதிநா கரிகத்து
வனப்புவீற் றிருந்த வாசவ தத்தையும்

பதுமாபதி[தொகு]

பழிப்பில் காரிகைப் பதுமா பதியுமென்
றொண்டுணைக் காத லொருதுணைத் தேவியர் 85
முட்டில் செல்வமொடு முறைமையின் வழிபட

உதயணன் வாசவதத்தையோடும் பதுமாபதியோடும் பொழுது போக்கல்[தொகு]

மதுக மதிர முதலாக் கூறும்
பதனுறு நறுங்கள் பட்டாங்கு மடுப்ப
உண்டுமகிழ் தூங்கித் தண்டா வின்பமொடு
பண்கெழு முழவின் கண்கெழு பாணியிற் 90
கண்கவ ராடல் பச்புளிக் கண்டும்
எல்லெனக் கோயிலுள் வல்லோன் வகுத்த
சுதைவெண் குன்றச் சிமைபரந் திழிதரும்
அந்தர வருவி வந்துவழி நிறையும்
பொற்சுனை தோறும் புக்குவிளை யாடியும் 95
அந்தர மருங்கி னிந்திரன் போலப்
புலந்தும் புணர்ந்துங் கலந்துவிளை யாடியும்
நாணா டோறும் நாள்கழிப் புணரா
தானாது நுகர்பவா லன்புமிகச் சிறந்தென்.

4 11 பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது முற்றிற்று.