6.நாகாஸ்திரப் படலம்
Jump to navigation
Jump to search
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]
ஓர் அங்கதக் காவியம்[தொகு]
(வரிகள்: 01-50)[தொகு]
- இம்முறை யாக இருக்கும் காலம்
- கணவரை ஒருநாள் மருமகன் கண்டு
- வழக்குப் பேச வந்தான் அம்மா!
- வந்தவன்,
- அம்மான் என்றோர் அடக்கமில் லாமல்,
- மாமன் என்றோர் வணக்கமில் லாமல்
- கூறின மொழியெலாம் கூறுவேன் அம்மா!
- “ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு
- ஆயிரம் பணத்துக் கதிகம் வருமோ?
- விளையை நிலமாய் வெட்டித் திருத்த (10)
- பனையை விற்ற பணம்போ தாதோ?
- கண்ணி யம்மை கலியா ணத்தில்
- கால்கா சுமக்குக் கைப்பொறுப் புண்டோ?
- மருமகள் என்றொரு பஞ்சா டிப்பொன்
- குச்சா கிலும்நீர் கொடுத்ததும் உண்டோ?
- ஆண்டு தோறும் ஆதா யத்தில்
- ஆயிரம் ரூபாய்க் கையம் இல்லையே!
- ஏழாண் டாக இந்த மிச்சம்
- எங்கே போச்சுது? என்னடா அப்பா!
- கேட்பா ரில்லையோ, கேள்வியு மில்லையோ! (20)
- நெட்ட ரமாவும் நெடுங்கண் வயலும்
- யாரிடம் கேட்டுநீர் ஈடு கொடுத்தீர்?
- கடனுக் கென்ன காரணம்? சொல்லும்.
- ஊரில் காரிய விசாரம் உனக்கு
- வேண்டாம் என்றேன்: ‘விடுவனோ’ என்றீர்
- கணக்கன் உமது கழுத்து முறிய
- எல்லாச் சுமைகளும் ஏற்றிவைத் ததனால்
- அம்மன் வகைக்கீ ராயிரம் ரூபாய்
- தெண்ட மிறுத்த கதைதெரி யாதோ?
- உச்சிக் கொடைக்குப் பிச்சி வெள்ளையும் (30)
- கொழுந்தும் தாழம் பூவும் கொண்டு
- வரவில்லை யென்றுநீர் வைரவன் மகளை
- எட்டி யடித்த எதுவி னாலே
- எத்தனை ரூபாய் வாரி இறைத்தீர்?
- இதுநாள் வரையிலும் எங்கட் காக
- எதைநீர் செய்தீர்? எதைநீர் தந்தீர்?
- மக்கட் கெல்லாம் வாரிக் கொடுத்தீர்.
- ஒருபூ வாகிலும் உழக்கு நெல்லு
- பொலியள விந்தா கொண்டு போஎனத்
- தந்ததும் உண்டோ? சரிசரி, இன்னும் (40)
- உள்ள நிலங்களை ஒவ்வொன் றாக
- ஒற்றி கொடுத்திடும், மலரணை ஓலைகள்
- எத்தனை வேண்டுமோ எழுதியும் வைத்திடும்!
- பேர்க்கூலிப் பிரமாணம் செய்யும்,
- இட்ட தானம் எழுதிக் கொடுத்திடும்
- வேண்டு மானால் விலையும் கொடுத்திடும்
- மனைவி பேர்க்கும் மக்கள் பேர்க்கும்
- உகந்துடை மைப்பிரமாணம் ஒன்றுநீர்
- இருக்கும் போதே எழுதியும் வைத்திடும்,
- மக்களை வீட்டில் வாழ வைத்திடும்; (50)
(வரிகள்: 51-100)[தொகு]
- எங்களைத் தெருவில் இறக்கி விட்டிடும்
- ஆசை அங்கே அன்பும் அங்கே
- பூசை இங்கே! போசனம் இங்கே!
- ஆரைக் கேட்டுநீர் ஐந்துகல் யாணம்
- அடுக்கடுக் காகச் செய்தீர்? ஐயா! (55)
- பட்டப் பெயரும் பஞ்சகல் யாணிப்
- பிள்ளை யென்றுநீர் பெற்று விட்டீரே!
- அன்னியர் பொருளை அபகரிப் பதிலும்
- ஊரார் பொருளை உண்டுவாழ் வதிலும்
- கைதேர்ந் தவர்கள் காரண வர்களே! (60)
- கள்ளர் மறவர் கணக்கரும் இவருக்கு
- எள்ளள வேனும் இணையா வாரோ!
- கன்னக் கோலும் கையில் படாமல்
- எழுது கோலும் இறகும் எடாமல்
- இரவும் பகலும் இஷ்டம் போலத்
- திருடும் திறமிச் சீமையில் எவருக்(கு)
- உண்டு? இதனை உணர்பவ ருண்டோ?
- கள்ளன் கஜானாக காவலன் ஆனால்
- கொள்ளை யடிப்பில் குறைவைப் பானோ?
- செல்வ மெல்லாம் சிதையக் காரணம்,
- சிறுவர் சோம்பித் திரியக் காரணம்
- மங்கையர் கண்ணீர் வடிக்கக் காரணம்
- வழக்குகள் மேன்மேல் வளரக்காரணம்
- குடும்ப நிலைமை குலையக் காரணம்
- நாஞ்சில் நாட்டுக்கோர் நாச காரணம் (75)
- எல்லாம் நீங்கள் என்றறிந் தல்லவோ
- காரண வர்(எ)னும் காரணப் பெயரைத்
- தந்தவர் உமக்கும் அந்தக் காலமே
- காரணத் தீனம் கடிய தீனம்,
- கண்டூ ரத்தில் மருந்து கருத்தாய்க்
- கொடுத்தா லன்றிக் குணமா காது
- போகர் மச்ச முனிபுலிப் பாணியர்
- கருணா னந்தர் கருவூர்த் தேவர்
- அகத்தியர் முதலிய ரிஷிகள் அனைவரும்
- வைத்தியம் மந்திர வாதம் இவற்றைப் (85)
- பாட்டுக் கணக்காய்ப் பாடி வைத்தனர்
- ஏட்டுக் கணக்காய் எழுதி வைத்தனர்
- இவரும் காரணத் தீனம்இன் னதென்ற
- அறிந்தொரு குளிகை லேகியம் அல்லது
- சூரணம் அதற்குச் சொன்னதும் உண்டோ? (90)
- அஷ்டாங் கிருத வைத்தியர், ‘ஐயா
- எல்லாப் பிணியிலும் பொல்லாப் பிணியிது.
- எங்கள் நாட்டில் இப்பிணி யாலே
- வருந்தா திருக்கும் மனிதர் சிலரே
- இதுநாள் வரையும் இப்பிணி தீர
- கஷாய மொன்று கண்டறிந் தவரிலை
- வயக்கரை மூகம் வைத்திய ரத்தினமும்
- எம்மா லாகா தென்றுகை விட்டிடில்
- பிணியின் கொடுமை பேசவும் வேண்டுமோ?’
- என்று கூறி யிருந்தனர், என்செய்வார்? (100)
(வரிகள்: 101-121)[தொகு]
- இங்கிலீஷ் டாக்டரும் இதற்கு மருந்துகள்
- இருப்ப தாக இயம்பிடக் காணோம்.
- இப்பிணி போல வெறுப்பை எழுப்பும்
- பிணியிவ் வுலகில் பிறிதொன் றில்லை.
- ஈக்களும் தேடி யீட்டிய தேன்போல் (105)
- பலரும் பலநாள் பாடு பட்டுக்
- கூட்டி வைத்த குடும்ப முதல்இத்
- தீனம் கொண்டவர் தீண்டுவ ரேல்உடன்
- ஆனை தின்ற விளாம்பழ மாம்அதற்கு
- ஐய மில்லை, அறியார் யாரே! (110)
- பாரும் பாரும் பத்திர மாயிரும்!
- குடும்ப தோஷி என்றுமைக் கொண்டு
- கோர்டில் கேஸு கொடுப்பேன் பாரும்
- உண்மை யாக உம்மையும் அதனில்
- சாட்சி போட்டு சமன்ஸை அனுப்பி (115)
- வரவில்லை யானால் வாரண்டும் அனுப்பி
- (காலரை செலவும் காரிய மில்லை)
- கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்
- ‘கிராஸும்’ கேட்டு கேவல மாக்கி
- விடவிலை யானால், வீர பத்திரன் (120)
- மகனென் றென்னை மதிக்கவே வேண்டாம்.”