பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

19


"நூறு கோடி பிரமர்கள் நொத்தினார்
ஆறு கோடி தாராயணர் அங்கனே
ஏறுகங் கைமணல் எண்ணின் இந்திரர்
ஈறுஇல் லாதவன் ஈசன் ஒருவனே." 25

என்ற திருப்பாடலும் நினைவிற்கு வருகின்றது.

இவ்வுலகிலுள்ள 92 தனிமங்களின் அணுக்களும் தம் மொடுதாமும் பிறிதுமாய்ச் சேர்ந்து அணுத்திரளைகள் ஆகிய திரட்சியே அண்டங்கள் என்பது அறிவியலார் ஆய்ந்து கண்ட உண்மையாகும். இந்த உண்மையினையே கவிஞர் பரஞ் சோதியார்,

"அண்டங்கள் எல்லாம் அணுவாக
அணுக்கள் எல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாப்ச்
சிறிதாயி னானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும்
 கரியாயி னானும்
அண்டங்கள் ஈன்றான் துணை என்பர்
அறிந்த நல்லோர்." 26

என்று அநுபவ இயலாய்க் கூறியுள்ளமையைக் கண்டு மகிழ்கின்றோம்.

மணிவாசகப்பெருமான் இந்த அண்டங்கள் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று கூறியுள்ள கருத்தை மகாக்கவி பாரதியார் வேறொரு விதமாய்க் கூறுவார்:

"நக்கபி ரான் அருளால் - இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அண்டங்கள் - வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணத் தெவரறிவார் - புவி
எத்தனை யுளதென்ப தியாரறிவார்!
நக்க பிரான்அறிவான்; -மற்று
நானறி யேன்பிற தரரறியார்;


25. தேவாரம் 5-100 , 3

26 திருவிளையாடல் புராணம் - பாயிரம் - 6