42இருட்டு ராஜா
“தெரியாது முத்துமாலை. நான் இந்த ஊருக்கு ரொம்ப வருஷமா வராமலே இருந்திட்டேனா? எனக்கு எதுவுமே தெரியாமப் போச்சு ஆமா, அவளுக்கென்ன?” என்று கேட்டான்.
“ஒண்னுமில்லே. அவளுக்குக் கல்யாணமாச்சு. புருஷனுக்கு ஏதோ பிசினஸ்னு சொன்னாங்க. வடக்கே எங்கேயோதான் இருப்பதாகக் கேள்வி. அதுதான் நீ எங்காவது பாத்திருப்பியோ, தகவல் ஏதாவது தெரியுமோன்னு கேட்டேன்...சரி, நான் வாறேன்” என்று கூறி முத்துமாலை நகர்ந்துவிட்டான்,
—யாருடைய மனம் எப்படி வேலை செய்யும், எப்போது எப்படி நடந்துகொள்ளும்னு கண்டுகொள்ளவே முடியறதில்லே. மனித மனம்கிறது மர்மமான, அற்புதமான விஷயம்தான். இந்த முத்துமாலையை நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யம்தான் அதிகமாகுது!
தங்கராசுவின் மனம் கிளர்ச்சியுற்றிருந்தது அன்றிரவு அவன் சரியாகத் துாங்க முடியவில்லை.
தங்கராசு திரிபுரசுந்தரியைப் பற்றி அதிகம் நினைத்தான். அவன் துாக்கம் கெட்டுப் போனதுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அந்நாட்களில் அவள் வகுப்பு பெண்களின் தலைவி மாதிரி செயல்பட்டாள். அவளுக்குப் பதின்மூன்று