உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோழி ஒன்று ‘குடுகு’டென்று
ஓடி வந்ததாம்—வந்து
குப்பை மேட்டில் ஏறிக் கிளறிக்
கிளறிப் பார்த்ததாம்.

தின்ன ஏதும் தானி யந்தான்
அங்கே இல்லையாம்—பசி
தீர்த்துக் கொள்ள வழியில் லாமல்
ஏங்கி நின்றதாம்.

அந்தச் சமயம் தரையில் ஏதோ
பளப ளத்ததாம்—மிக்க
ஆவ லாக அருகிற் சென்று
கூர்ந்து பார்த்ததாம்.

கண்ணைக் கவரும் வைரம் ஒன்றைத்
தரையில் கண்டதாம்—உடன்
கலக்கத் தோடு அதனைப் பார்த்துக்
கோழி சொன்னதாம்


13