உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினமும் காலையில் அவர் தலையில்
தெரிந்திடும் நரைமயிர் சிலவற்றை

‘வெடுக்கு வெடுக்’கெனப் பிடுங்கினளே.
வேதனை யால்அவர் குதித்தனரே!


மூத்தவள் மட்டும் சளைத்தவளா?
மும்முர மாக எண்ணினளே :

“எனது தலையில் பெரும்பகுதி
ஏற்கென வேதான் நரைத்துளதே.

என்றன் கணவரின் தலையுடனே
எனது தலையைப் பார்ப்பவர்கள்,

‘வாலிப ரான கணவர்க்கு
வாய்த்தனள் நரைத்த கிழவி’யென

என்னைக் கேலி செய்திடுவர்.
இதற்கொரு வேலை செய்திடலாம்”

என்றே எண்ணினள். அதன்படியே
எழுந்ததும் தினமும் அவர்தலையில்

கறுப்பாய் உள்ள மயிர்களையே
கருத்துடன் அகற்றிட லாயினளே.

தலையில் ஒருமயிர் பிடுங்கிடினும்
தாங்கிட நம்மால் முடிகிறதோ?


18