உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரபு ஒருவர் தம்ஊரில்
பெரிய கொட்டகை கட்டி அதில்
இரவில் காட்சிகள் நடத்திடவே
ஏற்பா டெல்லாம் செய்தனரே.

அற்புத மான வித்தைகளை
அங்கே காட்டிடும் அனைவர்க்கும்
பற்பல பொருளை அப்பிரபு
பரிசாய்க் கொடுத்தனர் நித்தமுமே.

கட்டணம் எதுவும் வாங்காமல்
காட்சிக ளெல்லாம் காட்டியதால்.
கொட்டகை நிறைய மக்களுமே
கூடினர் தினமும் இரவினிலே.


ஒருநாள் மேடையில் கோமாளி
ஒருவன் வந்து நின்றனனே.
“அரிய பெரிய வித்தையெலாம்
அடியேன் செய்வேன்; கண்டிடுவீர்.

பன்றி போலக் கத்திடுவேன்;
பார்த்தே அதிசயம் அடைவீர்கள்”
என்றே கூறிக் குனிந்தனனே;
‘ஈக்பீக் ஈக்’ எனக் கத்தினனே.


21

2994–2