உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“உண்மைப் பன்றி இதுபோல்தான்
ஓசை செய்யும். ஆஹாஹா!
என்னே அருமை! அருமை!”யென
யாவரும் அவனைப் போற்றினரே.

திரும்பத் திரும்பக் கோமாளி
செய்தான் அந்த வித்தையினை.
“அருமை! இதுபோல் செய்திடவே
யாரால் முடியும்?” என்றனரே.

இந்தக் காட்சியைக் கண்டதுமே,
எழுந்து வந்தான் முனியாண்டி.
வந்ததும் சபையில் இருந்தோரை
வணங்கி வார்த்தைகள் கூறினனே.

“பன்றி போலக் கத்தியதைப்
பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தீர்கள்.
இன்னும் நன்றாய்க் கத்திடவே
எனக்குத் தெரியும், நம்புங்கள்.

நன்றாய்ச் செய்து காட்டிடுவேன்.
நாளை இரவே நடத்திடலாம்”
என்றான். உடனே பிரபுவுமே
இணங்கினர். மறுநாள் நடத்திடவே.


22