உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜாடித் தேனும் தரையிலே
தவறிக் கொட்டிக் கிடந்தது.
நாடி அதனை ஈக்களும்
கூடி வந்து மொய்த்தன.

தேனின் மீது அமர்ந்தன;
திருப்தி யாகக் குடித்தன.
தேனைக் குடிக்கும் ஆவலில்
சிந்தை மறந்து போயின.

அதிக நேரம் அப்படி
அமர்ந்த தாலே தேனுமே,
பதிய வைத்த கால்களைப்
பசைபோல் பற்றிக் கொண்டது.


37

2964–3