உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வயலில் ஆடு மேய்த்த சிறுவன்
இதனைக் கண்டனன்;
வந்து வேட்டை நாயி டத்தில்
கேட்க லாயினன்;

“சின்னஞ் சிறிய முயலைப் பிடிக்க
முடிய வில்லையே?
‘தீரன், வேட்டை வீரன்’ என்று
பெருமை கொள்வதேன்?

என்ன கார ணத்தி னாலே
தோல்வி வந்ததோ?”
என்று கேட்க, வேட்டை நாயும்
பதிலுரைத்தது:-

“எனக்கும் அதற்கும் உள்ள தான
வித்தி யாசத்தை
எளிதில் அறிந்து கொள்ள லாமே!
தெரிய வில்லையா?

உணவுக் காகத் தொடர்ந்து சென்ற
எனது ஓட்டத்தால்,
உயிரைக் காக்க ஓடும் முயலை
வெல்ல முடியுமோ?”


40