பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உள்ளம் குளிர்ந்தது

மாக உள்ள திருமுகங்கள் ஆறும், தாமரை போன்ற கண்களும் ஒன்றுபட்டுக் குருவடிவாக எழுந்தருளி அடியேனது உள்ளம் தாபங்கள் அற்று அமைதியான குளிர்ச்சியைப் பெறும்படியாக வந்து குதித்தன.

பொரு - போர் செய்யும்.]

முருகனுடைய திருவுருவத் தியானம் செய்யச் செய்ய அவனே குருவாகி வந்து உண்மையை உணர்த்தியருளினன் என்பது கருத்து.