இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வறுமையே
வெளியேறு
எட்டு மாதமாய்
எங்கள்தலைவர்
தெருவில் நின்று
செழிக்கச் செய்தார்
முழக்கம்....
வறுமை
வெளியேறிற்றா
விரைவாய்...... ?
நேற்று
செட்டியார் வீட்டுத்
திருமணப் பந்தியில்
எதுவும் பேசாது
எங்கள்தலைவர்
எட்டி உதைத்தார்....
வறுமை,
வேக வேகமாய்
வெளியே றிற்று -
பரட்டைத்தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக...... !
18