10
தமிழ்ப் படவுலகில் தேர்ந்த, திறமைமிக்க, நடிகர்
உண்டா ? கிடையாது. நட்சத்திர நடிகை யில் அழகி யாரேனும் உண்டா ? கிடையவே கிடையாது. திறமையும் அழகும் உலவாத இடத்திலே கலை எப்படிச் செழிக்கும் : களை தான்-காளான்தான்-தலை தூக்க முடியும். இன்றைய சினிமா உலகில் மாமிச பிண்டங்கள், சதை மூட்டைகள், குட்டைச் சுரைக் காய், பொத்த பூசனிக் காய், வத்தப் புடலங்காய் என்றெல்லாம் கேலி பேசுவார்களே,----. த இனத் க்குரிய உருப்படிகள்தான் நடமாடுகின்றன. சுட்டுப்பொசுக்கினாலும் நடிப்பின் சாயைகூடப் படியாத - படிய முடியாத - திருப்பூர் பருப்பு மூட்டை' களும், புளிமூட்டைகளும், உதியமரக் கட்டைகளும்தான் நடி கர்கள் நடிப்பு
என்னவென்றே தெரியாத சாமர்த்தியசாலிகள் நடிக்கவந்துவிட்டார்கள் நட்சத்திரம் என்று பட்டம் சூடிக்கொண்டு குதிப்பது கூப்பாடு போடு வது இவையே நடிப்பு என நம்புகிற பிரகஸ்பதிகள் ஏராளம் .நெஞ்சை விடாய்த்துக்கொண்டு நடப்பவர்கள் ....அலங்காரச் சாத்திரங்கள்...நாடக மேடையிலே கத்தி கத்திப் பழகி கதறுவது அன்றி வரறியாப் பராபரங்கள். ......ஒரு படத்தில் தலைகாட்டிய உடனேயே ரொம்ப உயர்ந்த ஜந்து என்று நம்பி அகந்தையோடு அலைபவர்கள்....ஆண்களை அலட்சியமாகக் கருதி ஜம்பமாகத் திரியும் அலங்காரிகள் - இப்படி எவ்வளவோ ரகங்கள் : நடிப்பு, கதா பாத்திரம், கதை நிலை முதலியவைகளைப் பற்றி எண்ணி உணர்ந்து, திறமையாக நடிக்கவேண்டும்