உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழில் விருத்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

25

ஈன்றவள் பிள்ளை காத்தே
   இருப்பினும் சிறிது போழ்து
தோன்றுவாள்; இமையை மூடித்
   துயின்றுபின் எழுவாள்; நீயோ
ஈன்றவள் தனக்கும் தாயாய்
   இமைநொடி மூடல் இன்றி
ஆன்றதை விளக்கி ஊக்கும்
   அணிநகர்க்(கு) அன்னை ஆனாய்! .................................. 6

வீட்டினில் அறிவு மிக்க
   மேலவள் மாமி வாழ்ந்தால்
வீட்டினில் ஒழுங்கு நேர்மை
   மிகுந்திடும் என்பர் மேலோர்;
கூட்டினில் இருந்து கொண்டே
   குடியினை ஊக்கி நாளும்
ஆட்டிடும் பெரிய மாமி
   மணிக்கூண்டே ஆனாய்! வாழி! ...................................... 7

தன்னலம் சிறிதும் எண்ணாத்
   தகைமையால் உழைக்கும் சான்றோர்
மன்னிய புகழைப் போல,
   மணிக்கூண்டே! உன்றன் ஓசை
எந்நாளும் நீண்ட தூரம்
   இருப்பவர் அறிவர்; ஆனால்
உன்னைப்போல் மேலோர் எல்லாம்
   நீண்டநாள் உயிர்த்த துண்டோ? ....................................... 8