28
சுழல்விளக்கு
கடலில் நீந்திச் செல்கின்ற
கண்ணைக் கவரும் சிற்றுர்போல்
கடலைத்தாண்டும் நாவாயைக்
கண்டேன் ஒருநாள் சுழல்விளக்கே !
கடலைத் தாண்டும் நாவாயைக்
கட்டி அனைத்துன் ஒளிமுத்தம்
இன்றேல் கொடுங்கடலில்
எதிர்ப்பை யார்தான் முறியடிப்பார்?....................................... 3
நிறைந்த படையைத் தன்னகத்தே
நிறைத்துக் கொண்டே
மறைந்து மறைந்து கடல் வாழும்
மாற்றார் கப்பல் நீர்மூழ்கி
உறையு மிடத்தைச் சுழல்விளக்கே!
உன்கண் கண்டும் ஊரறிய
அறையா திருந்தால் உன்னாட்டார்
ஊமை என்றே அறையாரோ?................................................ 4
பொங்கிச் சீறி அலையெழுப்பிப்
போரைச் செய்யும் கடலிடையில்
தங்கித் தவித்து விழிபிதுங்கித்
தடந்தோள் அறிவு துணையாகக்
கங்குல் பகலில் கடல்எதிர்த்த
கப்ப லோட்டி செய்தியெலாம்
எங்கட் கேனோ சுழல்விளக்கே !
இன்னும் சொல்லா திருக்கின்றாய்?....................................... 5