உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழில் விருத்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கோட்டை

படைநுழையா மலையரண்கள்
    பகைதடுக்கும் பெருங்காடு
          படுநீர்க் கோட்டை
இடைநுழையாப் பெருஞ்சுவர்கள்
     சுவரின் மேல் இருந்தெதிர்க்கும்
          இருப்பி டங்கள்
அடைநுழையாத் தேனிப்போல்
     அணிவகுத்த வாள்மறவர்
         ஆற்றல் யானை,
குடைநுழையாப் பெரு வாயில்
     நிலையெல்லாம் வருவோர்க்குக்
         கோட்டை சொல்லும் !....................................2

தலையேறி முடிமிதிக்கும்
     மதயானை புரவியொடு
         தறுகண் வீரர்
கலையேறிப் பாய்கின்ற
     மலையேறிப் பகைவீழ்த்திக்
         கைவேல் போக்கி
நிலையேறிப் பறக்கின்ற
     கொடியாடும் நெடுஞ்சுவரில்
         நின்றெ திர்த்துச்
சிலையேறி வீழ்ந்திறந்த
     செய்தியெலாம் பழங்கோட்டை
         செப்பும் அந்தோ !...........................................3