உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழில் விருத்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 

கோட்டை

கோட்டையென்ற மறைவுக்குள்
    பெருமன்னர் ஒரு குடும்பம்
          குலவி வாழ
நாட்டகத்துப் பேரூர்போல
    மணிமாடம் நல்லரங்கு
          நடனச் சாலை
காட்டகத்து மலைமேலே !
    இந்நாளோ பாழடைந்த
          கருங்கற் கும்பல் !
மேட்டகத்தே குரல்கொடுக்கும்
    சிறுநரிகள், கூகையினம் .
          மேவும்; பாழாம் !........................................... 6

எத்தனையோ முடிமன்னர்
     இணையில்லாப் பெருவீரர்
          இருகை கட்டி
முத்தணியும் பொற்கலனும்
     முறைமுறையே இறைசெலுத்தி
          முன்றில் நின்ற
புத்தெழில்சேர் மணிவாயில்
     அணிமுரசம் போர்யானை
           புகுந்த கோட்டை
இத்தரையில் அந்தோபாழ் !
     முடியிாட்சிக் குறிப்புணர்த்தல்
            இதுதான் போதிலும் !.....................................7