இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
கோட்டை
கோட்டையென்ற மறைவுக்குள்
பெருமன்னர் ஒரு குடும்பம்
குலவி வாழ
நாட்டகத்துப் பேரூர்போல
மணிமாடம் நல்லரங்கு
நடனச் சாலை
காட்டகத்து மலைமேலே !
இந்நாளோ பாழடைந்த
கருங்கற் கும்பல் !
மேட்டகத்தே குரல்கொடுக்கும்
சிறுநரிகள், கூகையினம் .
மேவும்; பாழாம் !........................................... 6
எத்தனையோ முடிமன்னர்
இணையில்லாப் பெருவீரர்
இருகை கட்டி
முத்தணியும் பொற்கலனும்
முறைமுறையே இறைசெலுத்தி
முன்றில் நின்ற
புத்தெழில்சேர் மணிவாயில்
அணிமுரசம் போர்யானை
புகுந்த கோட்டை
இத்தரையில் அந்தோபாழ் !
முடியிாட்சிக் குறிப்புணர்த்தல்
இதுதான் போதிலும் !.....................................7