இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழில் விருத்தம்
35
கற்றுணர்ந்த நல்லமைச்சைக்
கவிபாடும் மேலோரைக்
கணித நூலைப்
பெற்றிருந்த முடிமன்னர்
பெரு வாழ்வை அரசியலைப்
பேணிக் காத்த
சுற்றுமதிற் பெருங்கோட்டை
நிலையெல்லாம் தொகைநூல்கள்
சொல்லும்; மக்கள்
கொற்றமிலாக் குறையாலோ
நாட்டகத்துக் கோட்டைச்சீர்
குறைந்த தந்தோ!.................................... 8
சிலைசுற்றித் தமிழ்காத்துத்
திசையெட்டும் புகழ்நாட்டத்
திண்டோள் வீரர்
அலைசுற்றும் கடலாண்ட
பழம்பெருமை நூலகத்தே
அறிந்து கொண்டு
மலைசுற்றும் படியேறித்
தலைசுற்றி மலையுச்சி
மன்னர் கோட்டை
நிலைசுற்றிப் பார்க்கையிலே
தாயகத்தின் நினைப்பினிலே
நெஞ்சம் வேகும் !