இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
வாணிதாசன்
நினைவென்றே உனையொதுக்கி
உன்னாட்டை ஆள்கின்றார்
நினைவில் மக்கள்;
நினைவிற்கே வரலாற்றுப்
பெரும்புலவர் நீள்குறிப்பை
நிலைக்கச் செய்தார்;
நினைவில்லாத் தாயகத்தின்
நிலையெண்ணா மக்கட்கே
நித்தம் நித்தம்
கனவாகிப் போனாயோ
மலைக்கோட்டைக் கற்சுவரே!
கருத்தை ஊட்டே! .......................................... 10
“முதனான்கும் காயாகிப் பின்னவைமா
தேமாவாய் முடியு மன்றே"
என்னும் 'விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.