இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழில் விருத்தம்
37
4. மாலை
அங்கும் இங்குமாய்ச் சிதறிய வெண்முகில்
அடிக்கடி ஒளிமாறப்
பொங்கு செங்கடல் நீள்மலை ஒப்பவே
புத்தெழில் அமுதூட்டித் -
திங்கள் நாணியே சிரித்தெழ ஊர்ப்பொதுத்
தெருவெலாம் விளக்கேற்ற மங்கு
செங்கதிர் தாமிரத் தட்டென .
மயக்கிடு மருண்மாலை!............................................ 1
பூத்த தாமரை வானிடைப் போய்விழு
பொற்கதிர்ப் பொலிவோடு
மூத்த தாமுயிர் முன்நகு அல்லியின்
முகத்தினில் விழிக்காமல்
போர்த்து வோம்முகம் என இதழ்ப் போர்வையால்
பொலிமுக விழிபொத்தப்
பார்த்த பேடைகள் ஆணினை விளித்திடும்
படுகதிர் சாய்மாலை !................................................ 2