40
வாணிதாசன்
ஆலை மாடென மற்றவர் நலம்பெற
அடிக்கடி நாடோறு
வேலை செய்திடு கூலிகள் ஏழையர்
வியர்வையின் பரிசாக
மாலை தந்திடு சிறுபொருள் வாங்கிடு
மனத்தினில் தெளிவில்லாக்
கூலி ஆட்களின் கொதிமனம் போலொளி
குன்றிய குளிர்மாலை!............................................. 9
தெங்கு மாவினில் செவ்வொளி மங்கிடத்
தெருவினில் நீர்தெளித்து
மங்கை மெல்லியர் வாழ்மனை கூட்டியே
மாவினார் கோலமிட்டுச்
செங்கை ஏந்திய விளக்கினை நீள்கடைத்
திண்ணையின் மேலேற்றிக்
கங்குல் நீக்கிடு திங்களை வாழ்த்திடு
கவின்மிகு கார்மாலை!........................................... 10
"குறிய ஈற்றுமாக் கூவிள முவவிளங்
காயொடுங் குறிகொள்ளே"
என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்குகேற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். காயொடும் என்பது மாங்காய் என அறிக.