பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்து வைக்கிறவன் 27

கவனிக்கவேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்டார்,

அதைத் தம்முடைய தோழர்களிடம் தெரிவிக்கவில்லை.

இந்த எண்ணம் உண்டானது முதல் அவருக்கு வம்பர் மகா சபையில் இருந்த சுவை நெகிழ்ந்தது. ஏதோ ஒரு துப்பை அறிவதற்குத் தொடங்குபவரைப்போல, அடியவர் கூட்டத்திற்கு அத்தனை ஊக்கம் உண்டாவதற்குக் கார ணம் இன்னது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர் அவர்.

அவர்கள் வழக்கம்போல் போய்க்கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சி செய்யப் புகுந்தவர் மெல்லத் தம் வீட்டினின்றும் புறப்பட்டார். அடியவர்கள் இறைவன் புகழைப் பாடிக் கொண்டு செல்லும் வழியைக் கவனித்து வைத்துக் கொண் டார். அங்கங்கே உள்ளவர்கள் அடியவர் கூட்டத்தை வலம் செய்து வணங்குவதைக் கண்ணுல் கண்டார். அவர்கள் அடியைக் கழுவி அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டார்கள்.

இது என்ன! நம்மைப்போல் எல்லோரும் இவர்களைப் பரிகாசம் செய்வார்கள் என்றல்லவா கினைத்தோம்? இந்த அடியார்களுக்கு அடியார்களாகப் பலர் இருக்கிருர்களே! என்ற உண்மை அவருக்கு வெளியாயிற்று.

ஒரு நாள், இரண்டு நாள் சேய்மையிலிருந்தே அடியார் கூட்டத்தைப் பார்த்தார். பிறகு அவர்கள் போகும் வழியிலே கின்ருர். அப்பால் வேறு சிலர் அடியார்களே வலம் வந்தது கண்டு தாமும் வலம் வந்தார். அப்படிச் செய்யவேண்டுமென்று ஏதோ ஒர் உணர்ச்சி அவருக்கு உள்ளேயிருந்து உந்தியது. . . .

இப்படி ஒரு வார காலம் ஆயிற்று. கூட்டத்தினரை நின்று கவனித்தார். அடியார்கள் யாருடைய கன்மை யையும் இமையையும் கவனிக்காமல் சென்றுகொண்டிருங்