என்று சீதை வருந்துவதனின்றும் விருந்தோம்பலின் சிறப்புத் தெரியவருகின்றது. இத்தகு சிறப்புமிகுந்த விருந் தோம் பலினை ச் செறிந்த நள்ளிரவிலும் விரும்பி மேற் கொள்ளும் நங்கையை,
‘அல்லில் ஆபினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள்’ என்று நற்றிணை (9:12) பாராட்டுகின்றது.
“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’
-திருக்குறள்,247
‘இல்லோர் லாழ்க்கை இரவினும் இளிவு’
குறுந்தொகை:282:2
முதலிய தொடர்கள் பொருளின் இன்றியமையாத தன்மை யினைப் புலப்படுத்தும், பொருள் தேடிவரத் தலைவன் செல்லும்பொழுது தலைவி தனித்துத் துயருறுகின்றாள். அவன் ’துன்பத்திறகு துணையாவதே தனக்கு இன்பந் தருவது என்கிறாள் :
“துன்பங் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?’
-கலித்தொகை : 6: 10-11
மேலும்,
‘ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்
ஒன்றினபர் வாழ்க்கையே வாழ்க்கை!”
-கலித்தொகை, 18 : 10-11
அன்றோ? எனவே தலைவன் செல்ல எண்ணியபோது,
தோழி,
“மற்றிவள் இன்னுயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே!’
-கலித்தொகை,7 : 19-21
என்று தெளிவுறக் கூறியும், தலைமகள்,