இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணனின் திருக்கதை ◇7
"உலகத்திற்கு நன்மை செய்ய அவதரித்தவன்” என்பதைப் 'பாயன்' என்னும் தொடரால் குறிப்பிடுகின்றார்.
இதோ அந்தப் பாடல்
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்,
"ஆயர் புத்திரன் அல்லன்; அருந்தெய்வம்;
மாயச் சீருடைப் பண்புடைப் பாலகன்;
பாயன்" என்று மகிழ்ந்தனர் மாதரே -பெரியாழ்வார் திருமொழி
இதுவே கண்ணனின் அவதாரப் பெருமையாகும். இக் கதையை இந் நூல் சொல்ல எடுத்துக்கொண்ட முயற்சியே கண்ணனின் திருக்கதை. ரா. சீனிவாசன்