உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கதிர்காம யாத்திரை


இலங்கை சென்றேன். கண்டியில் விழாக்கள் நடைபெற்றன. வேறு இடங்களுக்கும் சென்று பார்த்தேன். என் நினைவு கதிர் காமத்திலே இருந்தது. அன்பர் கணேஷ், "நான் இந்தக் காரை இப்போதுதான் வாங்கியிருக்கிறேன். இதில் முதல் முதலாகக் கதிர் காமத்துக்குப் போகும் பாக்கியம் கிட்டியிருக்கிறது. அதுவும்........." என்று மேலே என்னைப் பற்றிப் புகழ்ந்தார், அவர் தலாது ஒயா என்ற கிராமத்தில் இருப்பவர். அங்கிருந்து கதிர் காமம் இருநூறு மைல் இருக்குமென்று நினைக்கிறேன்.

நாங்கள் 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வியாழக்கிழமை யன்று புறப்பட்டோம். எங்களுடன் ஒரு சிங்களவரும் கதிர்காம வேலனைத் தரிசிக்க வேண்டுமென்று வந்தார். அவர் கதிர் காமத்துக்கு வருவதாகச் சொல்லவில்லை; 'கத்தரகம தெய்யோவை'த் தரிசிக்க வேண்டும். என்றார். பெளத்தர்களாகிய சிங்களவர் கதிர் காம வேலனை அப்படித்தான் சொல்கிறார்கள். எங்களுடைய காரின் சாரதியும் ஒரு சிங்கள இளைஞன்.

அன்று கார்த்திகை; முருகனுக்கு உரிய நட்சத்திரம். அன்று புறப்பட்டு இடையிலே சில இடங்களைப் பார்த்துக் கொண்டு மறுநாள் வெள்ளிக்கிழமை யன்று கதிர் காம வேலன் திருக் கோயிலுக்குச் செல்வது என்று திட்டம் போட்டுப் புறப்பட்டோம் மலைப் பகுதிகளிலே கார் ஏறி. இறங்கிச் சென்றது. அன்று துவரா எலியா, பண்டாரவளை, வதுளை என்ற இடங்களைப் பார்த்துவிட்டு, இரவு முனராகந்த என்ற தேயிலைத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தோம். அன்றிரவு அங்கே தங்கினோம்.

"முனரா கந்த என்ருல் என்ன பொருள்?" என்று கேட்டேன் அந்தத் தோட்டத்துத் தலைவரை. "மயில் குன்றம் பொருள். இந்தப் பக்கங்களில் மயில்கள் அதிகம்" என்று சொன்னர் அவர். அதுவரையில் அந்த இடத்தின்