உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கதிர்காம யாத்திரை


வருகிறார்கள். காட்சியின்பத்துக்காக வரும் கனவான்கள் அங்கே உணவு கொண்டு தங்குகிறார்கள். கதிர் காமக்துக்குச் செல்லும் திசை மாறாமல் அடையாளமாக நிற்கும் திசை மாராவில் சில நிமிஷங்கள் தங்கிக் கதிர் காமத்தை நோக்கிப் புறப்பட்டோம்.


2

சாலை வழியே

திர்காமத்தை கோக்கிச் செல்லும் பாதையில் எங்கள் கார் போய்க் கொண்டிருந்தது. கதிர்காம வேலனைப் பற்றியே உடன் வந்த அன்பர்கள் பேசினார்கள்.விழாக் காலத்தில் கார்களைத் திசைமாராவிலே நிறுத்தி விட்டுப் பக்தர்கள் அங்கிருந்து கால் நடையாகக் கதிர் காமத்தை கோக்கிப் புறப்படுவார்கள்.

முன்பெல்லாம் அந்தச் சாலை திருத்தமாக இருக்கவில்லை. இப்போது நன்ருக இருக்கிறது. லட்சக் கணக்கான அடியார்களின் பக்தி ஆவேசத்தைக் கண்டது அந்தச் சாலை. ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக அரோஹரா என்ற முழக்கத்துடன் அந்தச் சாலையில், செல்வார்களாம். அவ்வளவு மக்களும் கதிர்காமக் கடவுளையன்றி வேறு ஒரு நினைவும் இல்லாமல் செல்லும், காட்சியைப் பார்க்கும் பேறு எனக்கு இல்லை. ஆலுைம் அந்தக் கூட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை என் கற்பனைக் கண்ணால் பர்ர்க்க முயன்றேன். பலர் சொல்லிக் கேள்வியுற்ற காட்சிகளும் நானாக ஊகித்த தோற்றங்களும் என் அகக் கண்முன் வந்தன.

🞸🞸🞸

ங்கே பார்த்தாலும் அரோஹரா முழக்கம். அழுவாரும் தொழுவாரும் விழுவாரும் கதறுவாருமாக அன்பர்