உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 35 "வரதராசப் பெருமான்தான் காப்பாற்ற வேண்டும். சில்வாழ் சிற்றறிவுடைய பூச்சிகள் போன்றவர்கள் நாம். அவன் பார்த்துக் கொள்வான், தெய்விகத் திட்டமாக அமைந்து விடும். யார் அறிவார் அவன் திருவுள்ளத்தை?" என்றேன். ஆம் என்று அடியேன் கருத்தை ஆமோதித்தார். இவ்வாறெல்லாம் உரையாடிய சுவாமி இன்று பூவுலகில் இல்லை. வைகுண்டவாசியாகி விட்டார். தொண்டேசெய்து என்றும் தொழுது வழியொழுக பண்டே பரமன் பணித்த பணிவகையே.' ஒழிவில் காலம்எல்லாம் உடனாய் மன்னி வழுஇலா அடிமை செய்ய வேண்டும்.' 16. திருவாய் 10.4:9 17. மேலது 3.3:1