உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 39


மண் அன்னையின் தோற்றமும் இந்தப் பாடல்களில் விவரிக்கப்படுகிறது. முழுதும் நீராக இருந்த காலத்து, காற்று அசைந்து மண்ணை வெளிக்காட்டியது. மண் பரவிப் பரவிப் பூமியாக விரிந்து பரவியது.

மண் அன்னைக்கு நாயகனாக வானும் குறிக்கப்படுகிறது. மழையைப் பொழிய வைக்கும் மேகங்களும் நாயகன் என்றே தொடர்பாக்கப்படுகிறது. வானின் மைந்தன் மழை.

இவ்வாறு, நாயகர்களை உருவகப்படுத்தும் நோக்கிலே, பிற்காலக் கற்பு நெறியின் ஓர் இழையோட்டத்தைக் கூடக் காண்பதற்கில்லை.

ஸீதா என்ற தேவதையைப் பின்னர் காண்கிறோம். 'ஸீதா' என்ற சொல்லுக்கு உழுபடைக்கருவியாகிய கலப்பை என்று பொருள் கொள்ளலாம். பிற்கால இலக்கியங்களில் ஸீதா மழைக்கு அதிபதியான இந்திரனின் மனைவி என்று குறிப்பிடப்பட்டாலும், ருக்வேதப் பாடல்களில் அத்தகைய குறிப்பு இல்லை. (இராமாயண இதிகாசம், இந்திரனையே இராமனாக்கி சீதையை நாயகியாக்கிப் புனையப் பெற்றது என்பதும் ஒரு கருத்து.)

நல்ல பயிர் விளைச்சலுக்கு, ஸீதையின் அருள் வேண்டப்படுகிறது.

ஓ, பேரருள் மண்ணகமே ஸீதா என்ற பெயரை உடையவளே! எங்களின் செல்வங்கள் பெருக உன்னைப் போற்றுகின்றோம்.

“காலமெல்லாம் பால்வளம்செறிந்து வண்மை செழிக்க ஸீதே நீ அருள்வாய்
கலப்பையின் உழுமுனைகள் எங்களுக்காகப் பூமியில் நன்கு பதிந்து செல்லட்டும்
எங்கள் ஆயர்கள் கன்று காலிகளை மகிழ்வுடன் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லட்டும்”