இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37
வசந்தம் வந்தது;
பூமி வேசி
புதுமஞ்சள் பூசி
சதிராடிச் சிரிப்பாள்
சரக்கொன்றை மரத்துக்கடியில்.
38
நாளெல்லாம்
டீசல் சாராய
நாற்றம் உமிழும்
நகரத்துப் பேருந்தில்
காலையில் மட்டும்
கறிவேப்பிலை
மணங்கமழும்
கறிகாய்க்காரக்
கண்ணம்மாவால்
மீரா 42