13
ஆண்பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை; பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை.
சீனா
பெண் அடிமையாயிருந்தால், ஆண் சுதந்திரமாக யிருக்க முடியுமா? -ஷெல்லி
மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம். - இங்கிலாந்து
பெண்கள்
பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழிலுடையவள். -யூதர்
இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள், அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அழுவார்கள்.
-ஃபிரான்ஸ்
பெண் என்றால் பேயும் இரங்கும். - தமிழ்நாடு
ஒவ்வொரு மனிதனும் பெண்ணின் மகன். -ரஷ்யா
பெண்ணே, உன்னிடம் மூன்று நல்ல குணங்களும், நாலு லட்சம் தீய குணங்களும் இருக்கின்றன. நல்லகுணங்கள்: இசை பாடுதல், (இறந்த கணவனுடன்) சதியாக எரிதல், பிள்ளைகள் பெறுதல். -இந்தியா
மனிதனுக்குப் போர் எப்படியோ , அப்படிப் பெண்ணுக்குப் பிரசவம். -( ,, )
பெண்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சயித்தான் கூடப் பிரார்த்தனை செய்கிறான். -( ,, )
அத்திப்பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம், ஒரு பெண்ணின் மனத்திலுள்ளதைப் பார்க்கவே முடியாது.
-( ,, )
பெண்ணின் பேச்சிலே தேன் இருக்கிறது, உள்ளத்திலே நஞ்சைத் தவிர வேறில்லை. -( ,, )