23
நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.
-ஸ்பெயின்
சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.
-( ,, )
காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர். -( ,, )
காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும். -ஜெர்மனி
காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி. -( ,, )
காதல்தான் காதலை வெல்ல முடியும். -( ,, )
காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும். -( ,, )
காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை. -( ,, )
காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும். -( ,, )
காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை. -( ,, )
காதலுக்குக் காலம் கிடையாது. -( ,, )
காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.
-( ,, )
காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா. -( ,, )
அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும். -( ,, )
காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. -( ,, )
பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது. -( ,, )
காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான். -( ,, )
காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர். -( ,, )
சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும். -( ,, )
எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான்.
- இங்கிலாந்து
முத்தங்கள் திறவுகோல்கள். -( ,, )