48
ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி. - தமிழ் நாடு
[ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.]
உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனை அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களை வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும். -சீனா
ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை. -( , , )
(குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.)
கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
-( , , )
பெண் பிறந்தால், வீட்டுக் கதவு நிலை நாற்பது நாள் அழும்.
-அரேபியா
என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது, அவ னுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது.
-( , , )
மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும். -ஆர்மீனியா
உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை. -பாமா
[நம்பியிருத்தல் வீண்.]
தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை .
- கால்மிக்
குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை.
-குர்திஸ்தானம்
வீடு என்றால், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும்.
-( , , )