இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குப்பைமேடு
17
'குப்பையை அள்ளவேண்டுமா?"
'இந்தத் தொட்டியை அகற்ற வேண்டும்'.
'நீங்களும் ஒரு கை பிடிக்க முடியுமா?"
'உங்கள் ஆட்களிடம் சொல்லிச் செய்ய வேண்டு கிறேன்'
"சிலுவையைச் சுமக்கும் ஏசுநாதர் ஆவது அரிது; அவர் ஒருவர்தான் இருக்கமுடியும் என்பதைக் காட்டி விட்டீர்' என்றாள்.
'ஏன்மா நீ இங்கே இப்படி வேலை செய்வது சரியாகப் படவில்லை'.
ஏன்?"
'உன் மதிப்பு இழக்கிறாய்; நாளை மணமாக வேண்
டியவள்'.
'அதனால்தான் பழைய வேலையைவிட்டு வந்துவிட் டேன். அந்த வேலையில் நீடித்தால் பலபேர் சிரிக்க வாழ்ந் தாள் என்று என்னை மணக்க வரமாட்டார்கள்' என்றாள் .
அவருக்குப் புரியவில்லை.
பிறரைச் சிரிக்க வைப்பதுதான் அங்கு என் தொழில்' என்றாள்; நான் வரவேற்பாளர்' என்றாள்.