13
அலங்கார பொம்மைகளாய் மாதா கோவிலுக்கு மனிதர்கள் வருவானேன் என்து ஒரு பாதிரி எண்ணினாராம். உத்தரவு போட்டார்.
தங்க நகை, வெள்ளி நகை, ரத்தினமிழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்,
விலைதுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில் வர
வேண்டு மென்றே பாதிரி
விடுத்தார் ஒரு சேதி.
ஆண்களும் பெண்களும் மோட்ச சாம்ராஜ்ய ஆசார வாசலின் ஞானத்திறவுகோல் பெறக் கோவிலுக்குப் போனால், 'ஆமென்' எனப் பணிவர்.
அடிஸன் என்ற பேரறிஞன் சொன்னதல்லவா உண்மை! அவன் சொல்கிறான் ---- 'ஊரின் காதல் லீலைகள் செழிக்கும் அங்கே கோயிலின் மணிகள் முழங்கிய பின்னும். முன்னும்!' அதற்கு ஸாரி கட்டிய நாகரிக தர்மாமீட்டர்கள் போல் பெண்களும் ஆடம்பர பொம்மைகளாய் ஆண்களும், வந்தால் நானே ரசிக்கும்!
ஆகையினால், பாதிரி விடுத்த சேதியால் வந்தது வினை.
விஷமென்று கோயில்
வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்கள்!
பார்த்தார் பாதிரி. 'இதேதடா எழவு! நமது பிழைப்புக்கே ஆபத்து வந்துவிட்டதே' என்று தவித்தார்.