பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

39


இவ்வறிவுரை நீர் நிலை பெருக்குதலின் இன்றியமையாமையை இனிது புலப்படுத்தல் காணலாம்.

வேந்தர் அரசு முறைக்கெனத் தம் குடிமக்களிடம் பெறுதற்குரிய வரிப்பொருளை மக்களது வருவாய் நிலைக்கேற்பப் பெற்று வந்தனர். நாட்டில் மழை முதலியன இன்றிப் பஞ்சம் நேர்ந்த காலத்துத் தாம் பெறுதற்குரிய பொருளை வலிந்து பெறாது, வறுமை நீங்கி நாடு செழித்த காலத்துப் பெற்றுக்கொண்டார்கள். அறிவுடைய வேந்தர் நெறியறிந்து வரி பெறும் முறை இதுவேயாம். இவ்வரிசை முறையினை உணராத அரசியல் அதிகாரிகளால் சில சமயங்களில் மக்களுக்குத் துன்பம் நேர்தலும் உண்டு. அத்துன்பக் காலத்தில் நாட்டிலுள்ள பெருமக்கள் அரசனை அடைந்து, நாட்டு மக்களது நிலைமையினை எடுத்துரைத்து, அரசன் உள்ளத்தை நன்னெறிக்கண் நிறுத்தினார்கள்.

பாண்டியன் அறிவுடை நம்பி ஆட்சியில் வரிசையுணராத அரசியல் அதிகாரிகளுள் சிலரது தூண்டுதலால் மக்களிடத்து அன்பு கெட வரிகொள்ளும் பழக்கம் ஆங்காங்கே தோன்றுவதாயிற்று. அதனையுணர்ந்த பிசிராந்தையார் என்னும் பெரும்புலவர் பாண்டியனை அணுகினார். அறிவுடைய வேந்தன் நெறியறிந்து வரி பெறும் முறையினை மன்னனுக்கு விளங்க அறிவுறுத்தல் வேண்டுமென எண்ணிய அப்புலவர், அறிவுடை நம்பியை நோக்கிப் பின்வருமாறு கூறுவாராயினர்:

“நன்றாக முற்றி விளைந்த நெல்லையறுத்து யானைக்கு நாள்தோறும் இவ்வளவென்று அளவு செய்து கவளமாகக் கொடுத்து வந்தால், ஒருமாவிற் குறைந்த சிறிய நிலத்தின் நெற்கதிரும் ஒரு யானைக்குரிய பல நாளைய உணவாகப்