பக்கம்:சாவின் முத்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

5

சமூகத்தார் வாழட்டும்
உன்னேப்போன்ற
மாத்தமிழர் வாழுகின்றார்
இறப்பில், நீயும்
மடிவதுதான் உதயத்தின்
தீர்ப்பு, அங்கே
கோத்தாட நீ போவாய்
“அத்தான்-வீரன்”
குரவமலர்ச் சிரிப்பேந்தி,
வருவான்” என்று

அந்தரங்கம் ஒசையிட,
இந்த்ர நீலம்
அடர்ந்தது போல் விஷ
இருட்டுபூக்க, வெப்பம்
சிந்துகின்ற கண்கொழித்து
‘ஆம், ஆம்’ இந்தத்
தீர்ப்பேதான் சரிஎன்று
முணுமு னுத்து
வந்திட்டாள் மரணத்தின்
ஒட்டில் நஞ்சை
மட்டித்து வாய் குளிர்ந்தாள்
“சாவின் உச்சி”
உந்திற்று விண்ணுக்கு
கிழிந்த கொள்கை
ஒருசொட்டுக் காட்டிற்றா?
என்ன கோரம்!