உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அபிராமி.

7

––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––

ஆம்! கடைசியாக அவன் உணர்ந்து விட்டான். இருவர் கண்களும் நேரடியாகச் சந்தித்துவிட்டன! அந்த ஒரு வினாடியில் அவர்களது கண்கள் எவ்வளவோ செய்திகளைப் பரிமாறிக்கொண்டன கோபாலனுக்குள் பெரிய மனமாற்றம்! புரட்சி பலப்பல எண்ணினுன், உணர்ச்சியால் உந்தப்பட்டான் !

அன்று அவனுக்கு வேலையே ஓடவில்லை. ஒரே குழப்பம்! எப்படியோ சமாளித்துக் கொண்டு வேலையை தொடங்கினன். மன்துக்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தம் ஏற்படவில்லை. என்னென்னவோ கனவுகள் ! கற்பனேக் கோட்டைகள் !

அங்கோ! அச்சமயத்தில் அவன் கையில் பிடித்த கூரான உளி அவனையறியாமல் அவனது உள்ளங்கையில் ஆழமாகப் பாய்ந்து விட்டது இரத்தம் "குபு குபு" வென்று பொங்கி வழிந்தது! கோபாலன் சுயப்பிரக்ஞை இழந்துத்தரையில் சாய் ந்து விட்டான் !

அபிராமி இகைப்பார்த்தாள். அந்த உளி தன் மார்பில் பாய்ந்ததைப் போலிருந்தது அவ இருக்கு வேகமாக அறையினின்றும் ஒடி வந்தாள். வேறெதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. கோபாலனே எடுத்துத் தன் மார்பின்மீது சார்த்திக் கொண்டாள். வேண்டிய முதல் உதவியைப்பர பாப்போடு செய்காள். ஆம் மறைக்க முடியாது. கோபாலனின் ஸ்பரிச உணர்ச்சி அவளை ஒரு புதுப்பெண்ணாகமாற்றிப் புத்துலகில் பூரிக்கவைத்தது. சிறிது நேரத்தில் கோபாலன் ஜமீன் தாரீன் ஆட்களால் அவனது குடிசையில் கொண்டு சேர்க்கப் பட்டான்.பிராமியின் அன்பு பாராட்டப்பெற்றது.