இவ்வகராதி சராசரி வாசகர்களைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, சைவசித்தாந்தம் குறித்து அனைத்துச் செய்திகளையும் அறிய இவ் வாசகர்களுக்குப் பெரிதும் உதவும்.
இவ்வகராதியின் கையெழுத்துப் படியைப் படித்துப் பார்த்துச் செம்மை பெறுவதற்குரிய கருத்தேற்றங்களை வழங்கிய சைவசித்தாந்த அறிஞர் தஞ்சை திரு. டி.என்.இராமச்சந்திரன் அவர்களுக்கும்,மேற்கோள் நூல்களிலும் காணப்படாத சில சொற்களுக்கு எளிய விளக்கம் தந்து உதவிய பாவலரேறு தமிழறிஞர் தஞ்சை திரு.ச.பாலசுந்தரனார் அவர்கட்கும், இம்முழுமையான அகராதியை உரிய காலத்தில் வெளியிட்டுச் சைவசித்தாந்த உலகிற்குச் சீரிய தொண்டு செய்துள்ள கழக மேலாண்மை இயக்குநர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கட்கும் இவ்வகராதித் தொகுப்பாசிரியரின் உளங்கனிந்த நன்றி உரித்தாகும்.
இவ்வகராதியின் குறைநிறைகள் வாசகர்களிடமிருந்து இனிதே வரவேற்கப்படுகின்றன.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
பேரா. அ.கி.மூர்த்தி
தொல்காப்பியரகம்
123/8, சூளைமேடு நெடுஞ்சாலை,
பாண்டியன் நிழற்சாலை,
புதுஅங்காடித் தெரு, சென்னை -94
vi