இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்.வி. கலைமணி அண்ணா ஒரு நீர்வீழ்ச்சி! நீங்கள் அவனைப் பார்த்திரோ! அவன் ஒரு நீர்வீழ்ச்சி! அது ஒரு நீர்த்துளி! தெய்வத்தின் ஈரத்தால் நெய்யப்பட்டது! அதன் இழைகள், காலத்தை வெல்லும் பண்பாடு டையன! நீர்வீழ்ச்சிக்கு மறுபெயர் அண்ணா. அதோ அது தாயகத்தின் மடிமீது விழுகிறது! அதனுடைய சிதறலில்: ஒளி போர் செய்கிறது! இப்போது துளிகள் அத்தனையும் - வண்ணச் சொட்டு கள்! 17