பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பிள்ளைப் பேறு எளிதாக

துளசி, தாமரை வளையம், கருத்தாளி இம்மூன்றையும் சமமாகச் சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து, காடி வார்த்து அரைத்து, தொப்புகளுக்குக் கீழே அடி வயிற்றில் தடவ, எளிதாகப் பிள்ளை பிறக்கும்.

பிள்ளைப் பேறு நேராக வர

காட்டுமல்லிகை சமூலம் கொண்டுவந்து, விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, தொப்புளில் தடவ, பிரசவச் சிக்கல் தீர்ந்து நேரான பிள்ளைப்பேறு உண்டாகும்.

பிள்ளை குறுக்கிட்டுக் கொண்டால்

நாட்டு இலவமரத்தின் வடக்கே போகும் வேரைக் கொண்டு வந்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, புளித்த மோரிற் கலக்கிக் கொடுக்க, விலகிய பிள்ளையும் குறுக்கான பிள்ளையும் சரியாக வந்து பிறக்கும்.

இறந்த பிள்ளை பிறக்க

1. ஓரிலைத்தாமரைச் செடியை வேரொடு கொண்டு வந்து காடிவிட்டு அப்படியே அரைத்து முலைகளுக்குக் கீழே தடவ, வயிற்றில் இறந்த பிள்ளை, பிறந்துவிடும். இதற்கு கால் அளவு 1 1/2 மணி நேரம்.

2. நிலக் குமிழ் வேரை அரைத்துத் தண்ணீரிற் கரைத்து உடனே குடிக்க, மரித்த பிள்ளை வெளிப்படும். இதற்குக் கால அளவு 1 மணி நேரம், பத்தியமில்லை.

பிள்ளை பெற்ற நஞ்சு விழ

எள் இலையைக் கொண்டுவந்து தண்ணிரிற் கையால் பிசைந்து வடிகட்டிக் குடிக்க, நஞ்சு விழும்.

பிள்ளை பெற்றபின் மருந்து

குழந்தை பிறந்ததும் வேப்ப எண்ணெய் வீசம்படி உள்ளுக்குக் கொடுத்துவிடவும் அரைமணிக்குப் பிறகு