பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 9 தமிழ் முழக்கம் 0

எண்ணரிய செல்வத்தான் வான்நி கர்த்த

ஈகைவலான் மாநாய்கன் மகளாய் வந்தாள்; வண்ணமுக மங்கையர்கள் தொழுது போற்ற

வயங்கி யநற் பெருங்குணத்தாள்: வடிவு சொல்ல மண்ணகத்து நிகரில்லை; காமன் தேவி,

மண்மகள்என் றிவர்தாமே ஒருசார் ஒப்பர். 9

பொற்கொடியோ பூங்கொம்போ என்ற யிர்க்கப்

பூத்திருக்கும் நலமுடையாள் கொண்டான் சொல்லும் சொற்படியே நடக்கின்ற மென்கு ணத்தாள்;

சூதறியாள், அவள்வயதோ ஈரா றாண்டு; பொற்புடைய தெய்வமகள், கற்பின் செல்வி,

புரையில்லாக் குலக்கொம்பர் : இந்த மின்னை எற்கடியோ பிரிந்திருந்தான் துன்பந் தந்தான்?

ஈரமிலா நெஞ்சத்தான் செல்வக் கோமான். 10

'நெற்றிக்குப் பிறைநிகராம்; வேலி ரண்டு

நீள்விழிக்குச் சரிநிகராம்; விழியின் மேல்பால் உற்றிருக்கும் கரும்புருவம் கரும்பு வில்லாம்;

ஒளிமல்கும் வச்சி ரத்தின் நடுப்பா கந்தான் சிற்றிடைக்கு நிகராகும்; இயல்பான் வந்த

சீரிளமைப் பேரழகை மாதர் கூடி எற்றுக்குச் செயற்கையினாற் கோலஞ் செய்தார்?

எதைஎதையோ சுமையாகப் பூட்டு கின்றார்!" 11

'கானகத்தே தோகைமயில் சென்று புக்குக்

கரந்துறையக் காரணமென்? துள்ளும் புள்ளி மானடுத்த விழியாளின் சாயல் வேண்டி

மனமுடைந்து படுதோல்வி கண்டே யன்றோ? எற்கடி எற்கு + அடி =ஏனடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/31&oldid=571638" இலிருந்து மீள்விக்கப்பட்டது