உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தயா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி 35 யிலிருந்து உதட்டில் வழிந்து உப்புக் கரித்தது. அவள் உணர்ச்சியின் வேகம் அவன் உடலில் "விர்' சென்றது. "நான் படித்தவன் இல்லை” என்றான். "அப்போ நான் படிச்சவளா? எனக்கு மாத்திரம் என்ன தெரியும்?” 'இருந்தாலும் ஒன்று சொல்லுவேன்.”

  • என்ன...? என்ன?’’

'இந்த உலகத்திற்கும் அதற்கு அப்பாலும் ஆங்காங்கே எல்லைகளுண்டு. அவைகளுக்கப்பால் பார்க்கவும் முடியாது, தாண்டவும் முடியாது. ஒரு வேளை பார்க்கவும் கூடாது. தாண்டவும் கூடாது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.” "அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு நேர்ந்தது இப்படித்தான் நேரும்னு நான் கண்டேனா? அல்லது நேரவே தான் போறதுன்னு கண்டேனா? ஆனால் எனக்கு நேர்வது நேருகிறப்போ எனக்கும்தான் பயமாயிருக்கு- முனகிக் கொண்டு அவன் மேல் சாய முயன்றாள். ஆனால் அவன் தடுத்துக் கொண்டான். இன்னும் மண்டையில் மயிர் வேர்களின் குறு குறுப்பு அடங்கவில்லை. 'இன்னும் ஒன்று தெரிகிறது” என்றான். ' என்ன?” "உன்னிடம் நான் என்ன சொல்ல வந்தேனோ அதுவே இப்பத்தான் எனக்கு நன்றாகப் புரிகிறது.” "ஆமாமா மறந்துட்டேனே, நீங்கள் என்ன சொல்ல வந்தேள்?’’ 'நான் உன்னைவிட்டுப் போய்விடப் போகிறேன். ? ? ہیلج அதைத் தான் சொல்ல வந்தேன்' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/41&oldid=886340" இலிருந்து மீள்விக்கப்பட்டது