திருக்குறளார் தெளிவுரை
16
திருக்குறளார் தெளிவுரை I6
10.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 76 அறியாமையில் உள்ளவர்கள் அறத்திற்குத்தான் அன்பு துணையென்று கூறுவர். மறத்தினை (தீ நெறியினை) நீக்குதற் கும் அந்த அன்.ே துணையாகும்.
. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். 77
எலும்பு இல்லாத உயிரினங்களை வெயிலானது சுடுவது போல, அன்பில்லாத உயிர்களை அறம் கொடுமைப்படுத்தித் தண்டிக்கும்.
. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று. 78 மனத்தில் அன்பில்லாதவரது உயிர்வாழ்க்கை வலிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும்.
. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்? யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு 79 மனத்தின் உறுப்பாகிய அன்பில்லாதவர்களுக்கு மற்றைப் புறத்திலே இருக்கும் உறுப்புக்கள் எல்லாம் அறம் செய்தற்கு என்ன உதவியினைச் செய்யும்?
அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. 80 அன்பினைக் கொண்டு அதன் வழியில் நிற்பதே உயிர் இருக்கும் உடம்பாகும். மற்ற அன்பில்லாத ..ம்புகள் ாலும்பினைத் தோலினாலே போர்த்திக் கொண்டிருப்பனவா கும். உயிர் நின்றன ஆகா.