இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
திருவுந்தியார் — திருக்களிற்றுப்படியார்
முறையில் திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூல் நுதல்பொருளையும் வழிநூல் செய்தற்குரிய காரணத்தையும் அறிவுறுத்துவதாகும்.
திருக்களிற்றுப்படியாரின் மூன்றாம் பாடலாகிய இது, இந் நூலாசிரியரது உபதேச பரம்பரையினையும் இந்நூலாசிரியரின் குருவாகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனார் தமதுகுருவாகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருவுந்தியாரை (மாணவராகிய தமக்கு உபதேசித்தருளத் தாம் குருமுகமாகக்கேட்ட அப்பொருளேயே விரித்துரைத்ததாகத்) தம்மாணவருக்குச் சொல்லுதலால் இத்திருக்களிற்றுப்படியார்க்கு முதல்நூல் திருவுந்தியார் என்பதனையும் புலப் படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.
✽✽